×

ஆந்திராவில் டி.எஸ்.பி.க்கு சல்யூட் அடித்த எம்.பி. கொரண்டலா மாதவ்...

ஆனந்த்பூர் : ஆந்திராவில் மாக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியடைந்த எம்.பி.ஒருவர் காவல் துணைக்கண்காணிப்பாளருக்கு சல்யூட் அடித்தது சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது பாதுகாப்பு பணிகளை பார்வையிட ஆனந்த்பூர்  மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மஹபூப் பாஷா அமராவதிக்கு வந்திருந்தார். அப்போது ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் வேட்பாளரும், முன்னாள் காவல் ஆய்வாளருமான கொரண்டலா மாதவ் வழக்கம்போல் சல்யூட் அடித்தார். பதிலுக்கு டி.எஸ்.பி. மஹபூப் பாஷாவும் சல்யூட் அடித்தார். இதனை படம் பிடித்த சிலர் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவிட்டனர்.

எம்.பி.ஒருவர் டி.எஸ்.பி.க்கு சல்யூட் அடிக்கலாமா என்ற சர்ச்சை எழுந்த நிலையில், இதில் தவறு ஒன்றும் இல்லை என்று கொரண்டலா மாதவ் கூறியுள்ளார். ஆந்திர மாநிலம் தாதிபத்திரி காவல் நிலையத்தில் ஆய்வாளராக கொரண்டலா மாதவ் பணியாற்றியவர். பணியில் இருந்து விருப்ப ஒய்வு பெற்று இந்துபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட கொரண்டலா மாதவ் சுமார் 1,40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


Tags : Andhra Pradesh ,DSP ,Korandala Madhav , Photo of Andhra inspector-turned,-MP saluting former boss
× RELATED ரேஷன் அரிசி, கோதுமை, பருப்பு, ஆயில் என...